சு.க.சிந்துதாசன்
கோப்பைகள்..... சட்டிகள்......
வாளிகள்......
எனச் சுமந்தபடி
சனவரிசை நீள்கிறது
சற்று முன்தான்
மணியொலித்தது
அதற்குள்
அவ்வரிசை
தேர்வடமாய்....
ஆயிற்று
பதிவுக்காரனின் வேகம்
இன்னும் இன்னும்
பசியைம் கூட்டும்
உணவளிப்போன்
வார்த்தைகள்....
வெந்த புண்ணில்
வேல் பாச்சும்
கதியிழந்தாச்சு
எதற்கும்
இசைந்துதான்
ஆக வேண்டும்
மணத்தாலே
வாந்திவரும்
சோற்றுக்கும்
புளு நெளியும்
பயிற்றங் காய்க்கும்
இந்நிலையா?
எவரும் எவரையும்
இழிக்காத
அந்தஸ்த்துள்ள
பிச்சையெடுப்பு
வரிசைக் கடைசியில்
சிலருக்கு
உணவு கிடைக்காமலேயே
பசி தீர்கிறது.
நன்றி-ஜீவநதி
வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010
வியாழன், 5 ஆகஸ்ட், 2010
மீட்பாரற்ற கரையும் நண்டுகளின் நர்த்தனமும்

சு.க.சிந்துதாசன்
அலைதழுவிப் போன கரைகளெங்கும்
நிரையாய் நண்டுகள்
நடக்கத் தொடங்கியதால்...
கீறல்களால் கரை நிரம்பிற்று
கீறல்களையழிக்க
அலைக்கரங்கள் முயலவில்லை
கரைகள் பற்றிய
கவலை எதுவுமின்றி
கடலேனோ கடுமமைதி கொண்டிற்று
அலைகளின் ஸ்பரிசங்களை
ஏற்று பழக்கப்பட்ட கரைக்கு
நண்டுகளின்.... கீறல்கள்...
வலியை
ஏற்படுத்தியிருக்கக் கூடும்
வலிகளிலிருந்து மீள்வதற்கான
தவமொன்றைத் தொடங்கிய கரை
அலைகளைச் சபிக்கவும்
தவறவில்லை.
காற்றும் ஏனோ
விசும்பல்களுடனும் முனகல்களுடனும்
அடங்கிற்று
மீட்பாரற்ற கரை
மீளமீள வலி சுமக்கையில்....
நடந்த நண்டுகள்
நர்தனமாடவும் தொடங்கினால்.........?
நன்றி-திண்ணை,சங்குநாதம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)