
சு.க.சிந்துதாசன்
எச்சில் ஊறும் உனது வாயால்
நீ பேசிய போது
நான் அருவெருத்து முகம் சுழித்ததுண்டு
மிக அருகில் நெருங்கி
ரகசியமென
நீ எனது செவியில் ஓதும்
வார்த்தைகளை மட்டுமன்றி
உன் வாயிலிருந்து வீசும்
அந்தத் துர்நாற்றத்தையும்
என் மனம் ஒதுக்கி வைக்கும்
என் நிலை புரியாத நீ
ஏதோ புதுமை செய்ததாய் எண்ணியும்
என்னைப் புது உலகில் சிருஷ்டிப்பதாயும்
என்னையே தொடர்ந்தாய்
உனது கரகரத்த குரலும்
எக்காளமிடும் சிரிப்பும்
என் கிலேசத்தைக் கூட்டிப் போகும்
ஒவ்வொன்றாய்
எனது பற்றிய
உனது ஒப்பனைகள்
சில சமயங்களில்
என்னைச் சிரிப்பூட்டும்
நீ என்னை ஆரத் தழுவி
என் மேனியணைக்கையில்
விலகிக் கொள்ள
நான் துடித்த கணங்கள்
அசுரத்தனமானவை
நிலம் தொடும் நிழலாய்
எனைத் தொடர்ந்த நீ
முழுப்பார்வையையும்
என்னில் வீசியவாறும்
கைகளை இறுகப்பற்றிக் கொண்டும்
எனது பெயரை
உச்சரிக்க எத்தனித்தபடியும்
வதம் செய்து நீ போனாய்
அந்தக் கணங்கள்
இன்னும் என் செவிகளில்
துயர்ப் பாடலாய் ஒலிக்கிறது
நான் அருவெருத்து முகம் சுழித்ததுண்டு
மிக அருகில் நெருங்கி
ரகசியமென
நீ எனது செவியில் ஓதும்
வார்த்தைகளை மட்டுமன்றி
உன் வாயிலிருந்து வீசும்
அந்தத் துர்நாற்றத்தையும்
என் மனம் ஒதுக்கி வைக்கும்
என் நிலை புரியாத நீ
ஏதோ புதுமை செய்ததாய் எண்ணியும்
என்னைப் புது உலகில் சிருஷ்டிப்பதாயும்
என்னையே தொடர்ந்தாய்
உனது கரகரத்த குரலும்
எக்காளமிடும் சிரிப்பும்
என் கிலேசத்தைக் கூட்டிப் போகும்
ஒவ்வொன்றாய்
எனது பற்றிய
உனது ஒப்பனைகள்
சில சமயங்களில்
என்னைச் சிரிப்பூட்டும்
நீ என்னை ஆரத் தழுவி
என் மேனியணைக்கையில்
விலகிக் கொள்ள
நான் துடித்த கணங்கள்
அசுரத்தனமானவை
நிலம் தொடும் நிழலாய்
எனைத் தொடர்ந்த நீ
முழுப்பார்வையையும்
என்னில் வீசியவாறும்
கைகளை இறுகப்பற்றிக் கொண்டும்
எனது பெயரை
உச்சரிக்க எத்தனித்தபடியும்
வதம் செய்து நீ போனாய்
அந்தக் கணங்கள்
இன்னும் என் செவிகளில்
துயர்ப் பாடலாய் ஒலிக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக