புதன், 21 ஜூலை, 2010

ஒரு சருகு பற்றிய குறிப்பு


சு.க.சிந்துதாசன்

உரத்து வீசும் காற்றில்
அலையும் ஒரு சருகு
மழைக்கு
எங்கோ நிலத்தில்
ஒட்டிக்கொள்ளும்
வெள்ளம் வாரியடிக்க
அதனொடு பெயரும்
நீர் வற்றிய பின்
எங்கோ ஒரு மூலையில்
முடங்கும்

இப்போ
மென்காற்றுக்கு
நினைவு பெறும்
சூரிய வெப்பத்தில்
மீண்டும் தன்
இயல்பு காணும்

முன்பு
இதன் பெயரும்
வாழ்வும்
வேறு

இனி
காற்று....மழை.....
வெள்ளம்..... என
இங்கு எல்லாம் வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக